கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஜிவிஏஎல்-ன் பை ப்ரோ மற்றும் கோத்ரேஜ் பைபாஸ்



 94.69 லட்சம் கால்நடைகள் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில், கால்நடைகளின் ஆரோக்கியத்தில் குறைந்த கவனம் மாத்திரமே செலுத்தப்படுகிறது. கால்நடைகள் பல குடும்பங்களுக்கு நிதி ஆதாரமாக உள்ளது.

 எனவே, ஆரோக்கியமான விலங்குகளை வளர்ப்பதில் ஊட்டச்சத்து மிக முக்கியமான அம்சமாக இருப்பதால், கால்நடைகளின் சிறந்த ஆரோக்கியம் சிறந்த வருவாய்க்கான ஒரு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தச் சூழலை எதிர்கொள்ள, ஜிஏவிஎல், கால்நடைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி, மூலப்பொருள் மற்றும் கழிவுத் தீவனங்களுக்குப் பதிலாக கூட்டு தீவனத்திற்கு மாற்றுவதைக்  குறித்து விவசாயிகளுக்குக் கற்பிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் விவசாயிகள் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துகிறது.

“பால் உற்பத்திக்கான மொத்தச் செலவில் 70 சதவிகிதம், தீவனத்தைச் சார்ந்து இருப்பதால், அதிக மகசூல் தரும் கால்நடைகள் தினசரி உணவில் போதுமான ஊட்டச்சத்துகளைப் பெற்றால் மட்டுமே அவற்றின் மரபணு அளவை அடைய முடியும். கோத்ரேஜ் பை ப்ரோ மற்றும் கோத்ரேஜ் பைபாஸ் ஆகியவை பால் கொடுக்கும் கால்நடைகள் தங்கள் முழு உற்பத்தித்திறனை அடையவும், அவற்றின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்ற வகையில் ஒவ்வொரு கிராம் தீவனத்திற்கும் அதிக ஊட்டச்சத்தை வழங்குகின்றன” என கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் அனிமல் ஃபீட் பிசினஸ் இன் தலைமை செயல் அதிகாரி சந்தீப் சிங் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu