கல்லூத்து ஸ்ரீராமர்-சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

 



கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமர், சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா 27ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் மாலை 6 மணிக்கு அன்னதானமும், இரவு 10 மணிக்கு ராமர்-சீதா தேவி சப்பரம் இழுத்தலும், நள்ளிரவு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை பகலில் மாதவி வில்லிசை, தியாகராஜன் குழுவினர் நையாண்டி மேளம் நடைபெறுகிறது. நள்ளிரவு உச்சிகால பூஜை நடக்கிறது. 3வது நாளான திங்கள்கிழமை காலை பொங்கலிடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை  ராமர் கோயில் வகையறா ஊர் பெரிய குடும்பத்தார் செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu