மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தனிமடத்தூர் ஊராட்சி வள்ளியம்மாள்புரத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி, மே 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இப்போட்டிகளை மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்து, பரிசுகளை வழங்குகிறார்.
மேலும் இவ்விழாவில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், துணை சேர்மனுமான இரா.மகேஷ்மாயவன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவ.அருணன் ஆகியோரும் கலந்து கொண்டு பரிசு வழங்குகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 12வது வார்டு உறுப்பினர் சங்கர்ராம் செய்து வருகிறார்.
0 கருத்துகள்