இந்தியாவின் நம்பர் 1 ஃபர்னிச்சர் பிராண்ட், ராயல்ஒக் ஃபர்னிச்சர், தமிழ்நாட்டில் தனது கடை வலையமைப்பை மேலும் விரிவுப்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் புதிய கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் திரு. விஜய் சுப்ரமணியம், தலைவர், ராயல்ஒக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், திரு. மதன் சுப்ரமணியம், மேலாண்மை இயக்குநர், ராயல்ஒக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், திருமதி மகேஷ்வரி விஜய், இயக்குநர், ராயல்ஒக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் திருமதி பிரீதி மதன், இயக்குநர் ராயல்ஒக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான ஃபர்னிச்சர் தீர்வுகளை வழங்கும் ராயல்ஒக்கின் அர்ப்பணிப்பை இந்த விரிவாக்கம் மேலும் வலியுறுத்துகிறது. இந்த சிறப்புமிகுந்த தொடக்க விழாவில் ராயல்ஒக் குழுமத்திலிருந்து முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். திரு. கிரண் சாப்ரியா, ராயல்ஓக் பிரான்சைஸி தலைவர், திரு. தம்மைய்யா கோடேரா, தலைமை - VM & NSO மற்றும் திரு. ரஞ்சித் கப்பட்டு, பிராந்திய பிரான்சைஸி தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். வெற்றிகரமான இந்த வணிக விரிவாக்கம், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ராயல்ஒக் உருவாக்கிய பரந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளது. மேலும், பல்வேறு விற்பனையாளர் மற்றும் கூட்டாளிகளுடன் எதிர்கால வணிக விரிவாக்கத்திற்கு புதிய கதவுகளைத் திறந்துள்ளது.
புதிய கடை முகவரி : மருதம் டவர்ஸ், சந்தி ரோடு, பழமுதிர் நிலையம் எதிரில்ம் சரவணம்பட்டி, கோயமுத்தூர். தொடர்பு எண்: 73385 40563
10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கடையில் லிவிங் ரூம், பெட்ரூம், டைனிங் பகுதி, படிப்பு மற்றும் அலுவலகம், வெளிப்பகுதி, வீட்டு அலங்காரங்கள், மெத்தைகள் என பல்வேறு பரந்த மற்றும் சிறப்பாக ஃபர்னிச்சர் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் வாசிகள் இப்போது தங்களின் அருகிலேயே அமைந்துள்ள இந்த புதிய கடையில், ஸ்டைலான, புத்திசாலித்தனமான மற்றும் செயல்திறன் கொண்ட ஃபர்னிச்சர்களை குறைந்த செலவில் தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். தொடக்க விழா சிறப்பு சலுகையாக, ராயல்ஒக் கோயம்புத்தூர் கடை, குறிப்பிட்ட கொள்முதல் மதிப்புகளுக்கான வாடிக்கையாளர்களுக்கு ரூ.17,500 வரை மதிப்புடைய ரீகிளைனர் மற்றும் ரூ.7,500 வரை மதிப்புடைய வீட்டு அலங்காரப் பொருட்களை இலவசமாக வழங்குகிறது.
தொடக்க விழாவில் உரையாற்றிய ராயல்ஒக் ஃபர்னிச்சர் நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம் கூறுகையில், ”தமிழ்நாட்டில், ஏற்கனவே நாங்கள் சுமார் 30 கடைகளுடன் வலுவான வலையமைப்பை கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு புதிய கடையை திறப்பதில் பெருமை கொள்கின்றோம். இந்த புதிய கடை திறப்பு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்குவதோடு, இங்குள்ள சந்தையின் வளர்ச்சிக்கான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இங்கு உள்ள எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவையை தொடர்ந்து வழங்குவதை நாம் எதிர்பார்க்கிறோம். கோயம்புத்தூர் மக்கள், பொருத்தமான விலையில் கிடைக்கும் உலக தரமான தயாரிப்புகளை பயன்படுத்தி தங்களது இடங்களை அலங்கரிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். பிரான்சைஸி உரிமையாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்யவும், அவர்களின் கனவு இல்லத்தை பூர்த்தி செய்வதற்கு சிறந்த பொருட்களை தேர்வு செய்ய உதவவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், என்றார்.
இந்த புதிய கடை, அமெரிக்கா, இத்தாலி, மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சிறந்த மற்றும் தனித்துவமான ஃபர்னிச்சர் தேர்வுகளை காட்சிப்படுத்த கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட 'கண்ட்ரி ஸ்டோர்' பகுதியைக் கொண்டுள்ளது. தனித்தனி கடைகள் மூலம், ராயல்ஒக் தனது நவீனமான, செழிப்பான மற்றும் பொருத்தமான ஃபர்னிச்சர் பொருட்களால் வீடுகளின் அழகிய தோற்றத்தை மேம்படுத்த முனைகிறது. எங்கள் பிராண்ட், 1 கோடிக்கும் மேலான விரிந்த வாடிக்கையாளர்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. ராயல்ஒக் இந்தியாவின் அனைத்து பெருநகரங்கள் மற்றும் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ராயல்ஒக் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மற்றும் குஜராத் முதல் நாகாலாந்து வரை பரந்து விரிந்த ஃபர்னிச்சர் பிராண்டாக மாறியுள்ளது.
0 கருத்துகள்