ரூ.1842 கோடி போனஸ் தொகை அறிவித்தது டாடா ஏஐஏ

இந்தியாவின் மிக நம்பிக்கைக்குரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், 2024-25 நிதியாண்டுக்கான பங்கேற்புத் திட்டங்களில் ரூ.1,842 கோடி என்ற சாதனை போனஸ் தொகையை அறிவித்துள்ளது. இது 8.15 லட்சம் காப்பீட்டு திட்டங்களுக்கு பயனளிக்கிறது. கடந்த ஆண்டின் ரூ.1,465 கோடி போனசுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 26% அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் இதுவரை அளிக்கப்பட்ட மிக உயர்ந்த போனஸ் ஆகும்.

பங்கேற்பு திட்டங்களில் டையமண்ட் சேமிப்பு திட்டம், ஸ்மார்ட் வால்யூ இன்பக்ம் திட்டம், வால்யூ இன்பக்ம் திட்டம் மற்றும் சுப்ஃ ப்ளெக்ஸி இன்பக்ம் திட்டங்களுக்காக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பு காப்பீட்டு திட்டங்கள் அல்லது "பார்"  திட்டங்கள் என அழைக்கப்படுவது, காப்பீட்டாளர்களுடன் லாபத்தை போனஸ் அல்லது இலாப விகிதமாக பகிரும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் ஆகும். இந்த போனஸ் உத்தரவாதம் அளிக்கப்படுவதல்ல, ஆனால் காப்பீட்டாளரின் பங்கேற்புத் தொகையின் செயல்திறனைப் பொருத்து, வழக்கமாக ஆண்டுதோறும் அறிவிக்கப்படும்.

இந்த அறிவிப்பு, தங்களின் கனவுகளை நிறைவேற்ற உதவுபவர்களுடன் சகாப்தமாக இணைந்து செயல்படும் டாடா ஏஐஏ-வின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

“எங்கள் பங்கேற்பு காப்பீட்டாளர்களுக்கு இந்த ஆண்டும் மிக சிறந்த போனஸ் வழங்க முடிவடைந்துள்ளதைக் அறிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. டாடா ஏஐஏவழங்கும் இந்த சாதனைமிக்க போனஸ் அறிவிப்பு, எங்கள் காப்பீட்டாளர்களின் நம்பிக்கையை மதிப்பதால் மட்டுமல்லாது, அவர்களுக்கு உயர்ந்த வருமானங்களை வழங்க தொடர்ந்து முயற்சி செய்வதை வலியுறுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் கவலையில்லாத வாழ்க்கை வாழ, அவர்கள் நிதி இலக்குகளை அடைய, அவர்களின் குடும்பத்திற்காக ஒளிமிக்க எதிர்காலத்தை உறுதி செய்ய முழுமையாக அர்ப்பணித்திருக்கிறோம்,” என டாடா ஏஐஏ நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மற்றும் நியமிக்கப்பட்ட அக்சுவேரி ஷிதிஜ் ஷர்மா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu