பிளஸ் 2 தேர்வில் மாணவி பூமிகா 579 மதிப்பெண் பெற்று சாதனை

 பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாணவி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா 579 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருநெல்வேலி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா 600க்கு 579 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவி தமிழ் 95, ஆங்கிலம் 91, வரலாறு 99, எக்னாமிக்ஸ் 97, காமர்ஸ் 98, அக்கவுண்டன்சி 99 என 579 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சாதனை படைத்த மாணவி பூமிகாவை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். இம்மாணவி கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரிமாரியப்பனின் மருமகள் ஆவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu