கோயம்புத்தூர் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் மாணவர்கள் நீட் யுஜி தேர்வில் சாதனை

நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), கோயம்புத்தூரில் உள்ள தனது வகுப்பறைப் பயிற்சி (Classroom Program) மாணவர்களில் 170 பேர் தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG) 2026 தேர்வில் சிறந்த தரவரிசைகளைப் பெற்றுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பான சாதனை, மாணவர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பு, உறுதியான குறிக்கோள் மற்றும் ஒழுக்கமான பயிற்சியின் பிரதிபலிப்பாகும். இதற்கு ஆகாஷ் வழங்கிய கல்வி வழிகாட்டுதல் மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழலும் முக்கிய காரணிகளாக இருந்தன.

நிதின் தினகர்பாபு அகில இந்திய அளவில் (AIR) 522-வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், முத்துராகவ் (AIR 3347), ஹர்ஷிதா வெங்கடேஷ் (AIR 14627), எம். பூமிகா (AIR 16354), பிரித்திகா வாசினி வி (AIR 17594) என பல மாணவர்கள் சிறப்பான அகில இந்திய தரவரிசைகளைப் பெற்று கோயம்புத்தூர் மையத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீட் யுஜி 2026 தேர்வில் சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்ததன் மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கல்வி நிறுவனமாக ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) மீண்டும் தனது முன்னணி இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50 இடங்களிலும், 41 பேர் முதல் 100 இடங்களிலும் இடம்பெற்று தொடர்ந்து சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க வெற்றி, AESL நிறுவனத்தின் கல்விசார் சிறப்பிற்கான நீண்டகால பாரம்பரியம், மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அனுபவமிக்க ஆசிரியர்கள், விரிவான பாடப்பொருள், கடுமையான தேர்வு முறை மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் தொடர்ந்து உயர்தர மருத்துவ நுழைவுத் தேர்வு சாதனையாளர்களை உருவாக்கி வரும் திறனை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள் கூறுகையில்: "நீட் யுஜி 2026 தேர்வில் சிறந்த தரவரிசை பெற்றது எங்களின் நீண்டநாள் கனவு நனவாகிய தருணமாகும். எங்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்த ஆகாஷ் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கமான மாதிரித் தேர்வுகள், விரிவான செயல்திறன் மதிப்பீடுகள், சந்தேகங்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் அமர்வுகள் மற்றும் ஒழுங்குமுறையுடன் நடைபெற்ற வகுப்பறைப் பயிற்சிகள் ஆகியவை எங்களின் அடிப்படைக் கருத்துகளை வலுப்படுத்தி, தேர்வுத் தயாரிப்பு முழுவதும் கவனத்துடன் செயல்பட உதவியது. இந்த வெற்றி, எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராக உருவாக இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் உழைக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது” என்றார்.

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில், "மாணவர்களின் இந்தச் சாதனை, ஆகாஷ் குடும்பம் முழுவதற்கும் பெருமையான தருணமாகும். அவர்களின் ஒழுக்கம், தொடர்ச்சியான முயற்சி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை தேர்வுத் தயாரிப்பு முழுவதும் அவர்களை தனித்துவமாக வெளிப்படுத்தியது. இந்த சிறப்பான வெற்றிக்காக மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை எட்டி, சிறந்த மருத்துவர்களாக உருவாக எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL)-இன் ஒருங்கிணைந்த கற்றல் அமைப்பு, அனுபவமிக்க ஆசிரியர்கள், அறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடப்பொருள், தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய கற்றல், வழக்கமான மதிப்பீட்டுத் தேர்வுகள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நீட் போன்ற கடுமையான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்க உதவுகிறது.நாடு முழுவதும் பரந்து விரிந்த தனது பயிற்சி மையங்கள் மற்றும் டிஜிட்டல் கற்றல் தளங்கள் மூலம், AESL ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களை ஊக்குவித்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu