சிஎன்எச் நிறுவனத்தின் ஒரு பிராண்டான, நியூ ஹோலண்ட் தமிழகத்தில் எச்விஏசி கேபினுடன் கூடிய வொர்க்மாஸ்டர் 105 டிராக்டரை அறிமுகப்படுத்தியது. இது அதன் உயர்தர அதிக ஹார்ஸ்பவர் டிராக்டர் தொகுப்பில் சேர்க்கப்பட்ட சமீபத்திய மாடலாகும். இந்த புதிய வகை, அனைத்து காலநிலைகளிலும் இயந்திர ஓட்டுநருக்கு வசதியான பணிசூழலை வழங்குவதுடன், மேம்பட்ட செயல்திறன் அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நியூ ஹோலண்ட் நிறுவனத்தின் 106 ஹார்ஸ்பவர் டிராக்டர் வரிசையில் புதிய தரநிலைகளை உருவாக்கி, கடினமான வயல் நிலைகளிலும் அதிக வசதி, நீடித்த செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை வழங்குகிறது.
வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர், 106 ஹார்ஸ்பவர் திறன் கொண்ட 3.4-லிட்டர் எஃப்பிடி டெர்ம் 4 என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. குறைந்த ஆர்பிஎம் நிலையில் கூட சிறந்த செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எச்விஏசி கேபினுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய மாடல், ஹீட்டிங் மற்றும் ஏர் கண்டிஷனிங் வசதிகளுடன் கூடிய ஆறு கூரை காற்றோட்ட வாயில்கள் மூலம் அனைத்து காலங்களிலும் இயக்குநருக்கு அதிக வசதியை வழங்குகிறது. மேலும், சத்தமில்லாத சூழல் மற்றும் காற்றழுத்த அடிப்படையிலான ஏர்-சஸ்பென்ஷன் இருக்கை ஆகியவை நீண்ட நேரம் சோர்வில்லாமல் வேலை செய்ய உதவுகின்றன. கூடுதலாக, நியூமாட்டிக் ரிவர்சிபிள் ஃபேன் வசதி காரணமாக, அறுவடை முடிந்த பின் தூசி அதிகமாக இருக்கும் வயல் நிலைகளிலும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியும். குறிப்பாக நெல் அறுவடை முடிந்த பிறகு நடைபெறும் பேலிங் (baling) பணிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த நியூ ஹோலண்ட் விற்பனை இயக்குநர் - இந்தியா, சந்தீப் குப்தா, “விவசாய இயந்திரமயமாக்கலில் முன்னேற்றம் காணும் முக்கிய சந்தைகளில் ஒன்றாக தமிழகத்தை பார்க்கலாம். இங்கு விவசாயிகள் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை தொடர்ந்து ஏற்றுக்கொண்டு வருகின்றனர். வலுவான டீலர் வலையமைப்பு மற்றும் நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர் அடிப்படையுடன், இது எங்களின் வளர்ச்சிக்கான முக்கியமான பகுதியாகத் தொடர்கிறது. எச்விஏசி கேபினுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வொர்க்மாஸ்டர் 105, இத்தகைய சந்தைகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக ஹார்ஸ்பவர் மற்றும் கனரக செயல்திறனை வழங்குவதன் மூலம் பேலிங், மாட்டு தீவன அறுவடை (forage harvesting), ரிக் பணிகள் மற்றும் நீண்ட நேர வணிகப் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இது உள்ளது. அதே நேரத்தில், அனைத்து காலநிலைகளிலும் இயக்குவதற்கு ஒப்பற்ற வசதியையும் இந்த டிராக்டர் வழங்குகிறது” என்றார்.
கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வொர்க்மாஸ்டர் 105, உலகளாவிய சந்தைகளுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாடலாக வெற்றிகரமாக தன்னை நிரூபித்த பின்னர், தற்போது எச்விஏசி கேபினுடன் கிடைக்கிறது. இந்த புதிய மாடல், வொர்க்மாஸ்டர் தொடரின் வலுவான செயல்திறன் மற்றும் பரவலான வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இந்த தொடரின் விற்பனை ஏற்கனவே 15,000 யூனிட்களை கடந்துள்ளது.இந்த டிராக்டரில் 20 முன்சக்கர மற்றும் 20 பின்சக்கர பவர் ஷட்டில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 3,500 கிலோ வரை உயர்த்தும் திறன் கொண்ட வலுவான லிப்ட் கேபாசிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கனரக உபகரணங்களை எளிதாகவும் மென்மையாகவும் கையாள முடிகிறது. அனைத்து காலநிலைகளிலும் பயன்படும் கேபின், அதிக வெப்பம் அல்லது கடும் குளிர் போன்ற கடுமையான காலநிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், மெயின் டிரைவ் மற்றும் பவர் டேக் ஆஃப்க்கான முழுமையான வெட் க்ளட்ச் அமைப்பு, தொடர்ந்து அதிக சுமையில் இயங்கும் சூழ்நிலைகளிலும் நீடித்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. குறிப்பாக பேலிங், உருளைக்கிழங்கு நட்டு வளர்ப்பு போன்ற கடினமான பணிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பேலிங், ஃபோரேஜ் ஹார்வெஸ்டிங், ரிக் ஆப்பரேஷன்ஸ் போன்ற மேம்பட்ட பயன்பாடுகளுக்கும் வொர்க்மாஸ்டர் 105 மிகவும் பொருத்தமானதாகும்.
வொர்க்மாஸ்டர் 105, அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச சந்தைகளில் வலுவான இடத்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது எச்ஏவிசி கேபின் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய சந்தையிலும் இதற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிமுகத்தின் மூலம் நியூ ஹோலண்ட் நிறுவனம் பிரீமியம் டிராக்டர் பிரிவில் தனது முன்னணித் தலைமை நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. இந்திய விவசாயிகளுக்காக அதிக சக்தி, மேம்பட்ட செயல்திறன் மற்றும் அனைத்து காலங்களிலும் வசதியான இயக்க அனுபவத்தை வழங்கி, உயர் ஹார்ஸ்பவர் டிராக்டர் பயன்பாட்டிற்கு புதிய தரநிலையை உருவாக்குகிறது.

0 கருத்துகள்