டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) (பிஎஸ்இ: 532540, என்எஸ்இ: டிசிஎஸ்) [Tata Consultancy Services <https://www.tcs.com/> (TCS) (BSE: 532540, NSE: TCS)], ஐடி சேவைகள், ஆலோசனை மற்றும் வணிக தீர்வுகள் மற்றும் மின்னணுவியல், ஐடி, பிடி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை [IT services, consulting, and business solutions, and the Department of Electronics, IT, BT & Science & Technology] ஆகியவற்றில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம், கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தி வரும் தனது தனித்துவமிக்க டிசிஎஸ் கிராமப்புற தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா போட்டியின் 25-வது பதிப்பை [25th edition of the TCS Rural IT Quiz program.] கர்நாடக அரசுடன் இணைந்து நடத்துகிறது. டிசிஎஸ் கிராமப்புற தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா போட்டியின் 25-வது பதிப்பிற்கான முன்பதிவுகள் இப்போது ஆரம்பமாகி உள்ளன என்பது குறித்து அறிவிப்பதில் டிசிஎஸ் நிறுவனமும், கர்நாடக அரசும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றன.
பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு 2025 [Bengaluru Tech Summit 2025]-ன் ஒரு பகுதியாக, இந்த விநாடி-வினா போட்டியானது இணையம் வாயிலான தேர்வுகள், மெய்நிகர் முறையிலும், நேரடியாக கலந்து கொள்ளும் வகையிலும் விநாடி-வினா சுற்றுகளை நடத்த இருக்கிறது. சோதனைகள், மெய்நிகர் மற்றும் உடல் விநாடி வினா சுற்றுகளின் கலவையை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த மாபெரும் விநாடி-வினா போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்போடி கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் என்பதால், மாநகராட்சி எல்லைக்குள் உட்பட்ட பள்ளிகள் கலந்து கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் கிராமப்புற தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா [TCS Rural IT Quiz] போட்டியானது பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப சூழல், வணிகம், அத்துறையில் செயல்பட்டு வருபவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் [technology environment, robotics, business, its people, & new trends, including AI & cloud computing] போன்ற புதிய போக்குகள் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, புத்தகங்கள், மல்டிமீடியா, இசை, திரைப்படங்கள், இணையம், விளம்பரம், விளையாட்டு, கேமிங் மற்றும் சமூக ஊடகங்கள் [banking, education, entertainment, books, multimedia, music, movies, internet, advertising, sports, gaming & social networking] போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை ஏற்படுத்திய அம்சங்களையும் இந்த விநாடி-வினா போட்டி உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்தியா முழுவதுமாக மொத்தம் எட்டு பிராந்திய இறுதிப் போட்டிகள் நடைபெறும். இவற்றில் வெற்றி பெறுபவர்கள் நவம்பர் 2025-ல் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் தேசிய இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவார்கள். முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடிக்கும் அனைத்து பிராந்திய வெற்றியாளர்களுக்கும் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.7,000 பரிசுக்காக வெகுமதி அட்டைகள் [gift vouchers] வழங்கப்படும். தேசிய அளவில் முதல் மற்றும் இரண்டாமிடத்தைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு டிசிஎஸ் கல்வி உதவித்தொகை [TCS education scholars] முறையே ரூ 100,000 மற்றும் ரூ 50,000 வழங்கப்படும். இந்த விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 30, 2025-க்கு முன் <https://iur.ls/tcsruralitquiz2024reg> என்ற இணைய முகவரிக்கு சென்று விநாடி-வினா போட்டிக்கு பதிவு செய்யலாம்.
இந்த விநாடி-வினா போட்டியின் முந்தைய பதிப்பில், இந்தியா முழுவதிலும் இருந்து 28 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில் இருந்து 5.6 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் டிசிஎஸ் விநாடி-வினா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
டிசிஎஸ், 2000-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் மின்னணுவியல், ஐடி, பிடி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் [Department of Electronics, IT, BT and Science and Technology, Government of Karnataka] இணைந்து கிராமப்புற தகவல் தொழில்நுட்ப விநாடி-வினாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. இந்தியாவில் இருக்கும் சிறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வை மேம்படுத்துவதே இந்த விநாடி-வினா போட்டிகளின் முக்கிய நோக்கமாகும். மேலும் தொழில்நுட்ப உலகில் நிகழும் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதையும் இலக்காக கொண்டுள்ளது. இந்தத் விநாடி-வினா போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை 21.5 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைந்திருக்கிறது. மேலும் இந்தியாவின் கிராமப்புற மாணவர்களுக்கான முதன் முதலாக தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விநாடி-வினா என லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்