டாடா பவர் நிறுவனம் தனது திறன் மேம்பாட்டுப் பிரிவான டாடா பவர் திறன் மேம்பாட்டு நிறுவனம் (Tata Power skill development institute (TPSDI)) மூலம், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்துடன் (Directorate of Employment and Training (DET)) இணைந்து மாநிலம் முழுவதும் சூரிய சக்தி திறன் மையங்களை (Solar Skill Centres of Excellence (SCOEs)) நிறுவியுள்ளது. புதியதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டு செயல்பாடானது, பேட்டை, தூத்துக்குடி, சாத்தூர் மற்றும் விருதுநகரில் உள்ள நான்கு அரசு ஐடிஐ-களில் SCOE-களை தொடங்குவதற்கு வழிவகுக்கும். இந்த மையங்கள் சூரிய ஆற்றல் மற்றும் இது தொடர்புடைய காற்று மற்றும் க்ரீன் ஹைட்ரஜன் [wind & green hydrogen] போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருக்கும் வேலைவாய்ப்புக்களுக்கு அவசியமான மற்றும் முக்கிய திறன்களை இளைய தலைமுறையினருக்கும் வழங்குவதோடு, மின் சக்தி துறையில் நீடித்து நிலைக்கத்தக்க சூழலை உருவாக்குவதே இந்த கூட்டு செயல்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இந்த கூட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, TPSDI திறன் மைய பயிற்சிக்கான பாடத்திட்ட உருவாக்கம், பயிற்சி வழங்கல் மற்றும் மதிப்பீடுகளை முன்னெடுக்கும். அதே நேரத்தில் DET தனது ஐடிஐ நெட்வொர்க் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் இளைய தலைமுறையினரைச் சென்றடைவதற்கு ஆதரவளிக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டி.பி.எஸ்.டி.ஐ.யின் தலைவர் திரு. அலோக் பிரசாத் [Mr. Alok Prasad, Head, TPSDI] மற்றும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் திரு. பி. விஷ்ணுசந்திரன், ஐ.ஏ.எஸ். [Mr. B. Vishnuchandran, I.A.S., Director of Employment and Training, Government of Tamil Nadu] ஆகிய இருவரும் டி.இ.டி.யின் கூடுதல் இயக்குநர் திரு. டி. ராஜசேகர் [Mr. T. Rajashekar, Additional Director, DET] மற்றும் டாடா பவர் நிறுவனத்தின் ஆலோசகர் திரு. ஜே.சி. மிஸ்திரி [Mr. J. C. Mistry, Advisor, Tata Power] ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இந்த கூட்டு செயல்பாடு திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதை பிரதிபலிக்கிறது. மேலும் அதிக வாய்ப்புகளுடன் இருக்கும் தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளையும் ஆதரிக்கும் வகையில் இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. டி.இ.டி.யின் மையங்களைத் தொடங்குவதற்கேற்ற புதிய இடங்களை அடையாளம் காண்பதன் அடிப்படையில், எதிர்காலத்தில் கூடுதல் மையங்கள் இம்முயற்சியில் சேர்க்கப்படலாம்.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் திரு. பி. விஷ்ணுசந்திரன், ஐ.ஏ.எஸ். [Mr. B. Vishnuchandran, I.A.S., Director of Employment and Training, Government of Tamil Nadu] கூறுகையில், டி.பி.எஸ்.டி.ஐ உடனான இந்தக் கூட்டு முயற்சி, தமிழ்நாட்டில் தொழில் பயிற்சிக்கான சூழலையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் திறன் பெற்றவர்களின் குழுவையும் வலுப்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பு மாற்றத்தை குறிக்கிறது. ஐ.டி.ஐ.-களின் கற்கும் சூழலில் தொழில்துறை தொடர்பான பயிற்சியை ஒருங்கிணைப்பதன் மூலம், எதிர்கால முன்னேற்றங்களுக்கேற்ற வகையில் திறன்களுடன் தயாராக இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த விரும்புகிறோம். இதனால் இம்முயற்சியானது, பசுமை எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு முயற்சிகளில் முன்னணியில் இருப்பதற்கான மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இசைந்துப் போவதால், இம்முயற்சியின் மூலம் நமது இளைஞர்களின் திறன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட இருக்கிறோம்’’ என்றார்.
"TPSDI மூலம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் திறன் மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்திசைந்துப்போகும் வகையில் திறமையான பசுமைப் பணியாளர்களை உருவாக்குவதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம். தமிழ்நாடு அரசாங்கத்துடனான எங்கள் கூட்டு செயல்பாட்டை முன்னெடுப்பதன் மூலம், அனைத்து தரப்பினரையும், அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தை ஆதரிப்பதற்கும் இணைந்து செயல்பட இருக்கிறோம். மேலும், நாடு முழுவதும் தொடர்ந்து இது போன்ற கூட்டு செயல்பாடுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்," என்று டாடா பவர் நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் CSR தலைவர் திரு. ஹிமால் திவாரி [Mr. Himal Tewari , CHRO, Chief - Sustainability & CSR, Tata Power] கூறினார்.
TPSDI தொடங்கப்பட்டதிலிருந்து, வளர்ச்சிக் கண்டுவரும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பசுமை ஆற்றல் (சூரிய மின்சக்தி, காற்றாலை, க்ரீன் ஹைட்ரஜன், பம்ப்ட் ஹைட்ரோ ஸ்டோரேஜ்) [(Solar energy, wind, green hydrogen, pumped hydro storage)], பகிர்மானம் மற்றும் விநியோகம், உற்பத்தி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு தளங்களில் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. சமீபத்தில், இது NCVET-ன் கீழ் இரு வழி அங்கீகார அமைப்பாக [Dual Awarding Body (AB-Dual)] அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம், திறன் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு தன்னிச்சையாக தகுதிகளை மதிப்பிடவும், சான்றளிக்கவும் உதவுகிறது. இந்தியா முழுவதிலும் பரவலான மிகவும் வலுவான செயல்பாடுகளுடன், TPSDI மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கேரளா, ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 11 பயிற்சி மையங்களை இயக்கி வருகிறது. ஆண்டுதோறும், TPSDI, 80,000-க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு பயிற்சி அளிக்கிறது, இவர்களில் 33% பேர் பசுமை ஆற்றல் துறையில் பயிற்சி பெறுகிறார்கள். இங்கு பயிற்சி பெற்ற இளைய தலைமுறையினரில் 40% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பாலின பாகுபாடு இல்லாமல் அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்கவேண்டுமென்பதில் TPSDI கொண்டிருக்கும் வலுவான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
அரசு அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து, தொழில்துறை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், TPSDI தொடர்ந்து தூய்மையான எரிசக்தித் துறையில் திறன் இடைவெளியைக் குறைத்து, சமூகங்கள் நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்க உதவுகிறது.
டாடா பவர், ஒரே ஆலையில் அதிகளவில் மின் சக்தியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய சிங்கிள்-லோகேஷன் [single-location] ஆலையில் 4.3 GW சோலார் செல் மற்றும் 4.3 GW மாட்யூல் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இயக்கி வருகிறது. இந்த ஆலையில் 80 சதவீத பெண் ஆபரேட்டர்கள் உள்ளனர், இது இளைய தலைமுறையினரிடையே அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் பசுமைத் திறன் மேம்பாடு ஆகிய இரண்டு அம்சங்களிலும் டாடா பவர் நிறுவனம் காட்டிவரும் அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைந்திருக்கிறது.
0 கருத்துகள்