திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொலைக் கல்வி மற்றும் இணைய வழி கல்வி நிறுவனத்தின் தென்காசி கல்வி மையம் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா வெய்காலிப்பட்டி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் முனைவர் சகாய ஜாண் தலைமை தாங்கி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். பாவூர்ச்சத்ரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே. ஆர். பி. இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண் தானம் மற்றும் இரத்தம் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.
தென்காசி மெடி இயக்குனர் முனைவர் சுரேஷ் ஜான் கென்னடி முன்னிலை வகித்து மாணவர்களுக்கு மத்திய மாநில அரசின் சிறப்பு தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கி பேசினார். தென்காசி அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் கலந்துகொண்டு மாணவர்களிடயே மூடநம்பிக்கையில் இருந்து விடுபட்டு அறிவியலோடு சிந்தனை திறன்களை வளர்க்கும் பொருட்டு விளக்கவுரை ஆற்றினார்.
பாரதிதாசன் பல்கலைகழக தொலைக் கல்வி தென்காசி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் வில்சன் அருள் ஆனந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைகழக தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறும், கடந்த தேர்வில் 93 விழுகாடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதையும் விளக்கி பேசினார். தமிழகத்திலேயே தொலைக்கல்வியில் வரவேற்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடத்துவது தென்காசி ரெடி கல்வி மையத்தின் சிறப்பாக எடுத்து கூறினார். இந்த விழாவில் 300 கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்திருந்தனார்.
விழா ஏற்பாடுகளை தென்காசி ரெடி மைய நிர்வாக இயக்குனர் தாமரைச்செல்வி அலுவலர்கள் பாத்திமா, சங்கீதா, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். இதில் புனித ஜோசப் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவராஜா, நூலகர் தீபன் பாக்கியராஜ் மற்றும் பாவூர்ச்சத்ரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர் ஆனந்த், முன்னாள் பொருளாளர் பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் MBA மாணவர் முருகேசன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்