அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கழிவறை சுகாதார விழிப்புணர்வு

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் மாணவிகளுக்கு கழிவறை சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடத்திட்டத்தில் 1600க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். போதுமான கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி உள்ளது. இதனால் கழிவறை பயன்பாடு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு ஏற்பாடு செய்தது. இதையடுத்து வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார்.  சிறப்பு விருந்தினராக ஆயுர்வேத மருத்துவர் ஆஃபிலா கலந்து கொண்டு மாணவிகள் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும், கழிவறைகளை எப்படி பயன்படுத்த வேண்டும், முறையாக சுத்தம் செய்யாத கழிவறைகளால் ஏற்படும் நோய்கள், அதன் முலம் எதிர்காலத்தில் ஏற்படும் வாழ்வியல் பாதிப்பு போன்றவை குறித்து எடுத்துரைத்தார். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி காருண்யா கழிவறை பயன்பாடு குறித்து மாணவிகளை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க வைத்தார். 

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் சமுத்ரா செந்தில், துரித உணவுகளில் இருக்கும் ஆபத்துகள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜெகதா நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu