இந்தியாவில் புதிய சகாப்த வளர்ச்சிக்கான டிஜிடல் உத்தியை மேம்படுத்துகிறது, ஸ்கோடா

ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஏற்கனவே தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிவிப்பு மூலம் புதிய சகாப்தத்தில் தடம் பதித்துள்ளது. பயனர் ஈடுபாடு, வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுடன், புதிய சகாப்தத்தில் மேலும் முன்னேறி,  ஸ்கோடா நிறுவனம் 360 டிகிரி டிஜிட்டல் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியது.  இது முக்கிய லேண்ட்மார்க் விற்பனை சாதனையை எட்டிய உதவியதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாகவும் உறுதுணையாக இருந்தது.  

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில் “டிஜிடல் நிலப்பரப்பு, தளங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் சூழலில்,  வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பயணத்தை மேம்படுத்தப் புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.  வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் எங்கள் பொருள்கள் மற்றும் சேவைகள், அவர்கள் விரும்பும் மொழியில் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் டிஜிடல் உத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அறிமுகமாகவுள்ள அனைத்தும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-க்கான ‘உங்கள் ஸ்கோடாவுக்குப் பெயர் சூட்டுங்கள்‘ பிரச்சாரம் இதுவரை 1,50,000 பரிந்துரை நுழைவுகளை ஈர்த்துள்ளது. இந்தியாவில் தடம் பதித்த 24 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், சமீபத்தில் நிறைவடைந்த, முதன் முதலாக அறிமுகமான, முழுவதும் டிஜிடல் மயமாக்கப்பட்ட, 24 மணி நேர விற்பனையில் 709 ஸ்கோடா மகிழுந்துகள் ஒரே நாளில் முன்பதிவாயின.   எங்களது ஸ்கோடாவெர்ஸ் இந்தியா என்எஃப்டி-ஐ,  ஸ்கோடா கியர்ஹெட்ஸ் அறிமுகம் மூலம் மேலும் விரிவுபடுத்தி உள்ளோம்.  இந்த பரந்த மற்றும் மாறுபட்ட சந்தையில், இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவு செய்ய, அவர்களைச் சென்றடையும் வழிகளை நாங்கள் தொடர்ந்து ஏற்றும், மாற்றியமைத்தும் வருகிறோம்‘ என்றார்.

உங்கள் ஸ்கோடாவிற்குப் பெயர் சூட்டுங்கள்
இது, 2025 ஆம் ஆண்டில் சாலைகளில் பவனிவரும் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி-க்கான பெயரைத் தேர்ந்தெடுப்பதில், பயனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஸ்கோடா ரசிகர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், செயல்படுத்தும் பிரச்சாரமாகும். பிரச்சாரத்தின் விளைவாக இன்றுவரை 1,50,000க்கும் மேற்பட்ட பெயர்கள் பதிவாகி உள்ளன. அவற்றில் 21,000க்கும் அதிகமானவை தனிப்பட்ட பெயர்கள். இவை அனைத்தும், ஸ்கோடாவின் எஸ்யூவி-க்களுக்கு  'K' (கே)இல் தொடங்கி, இடையில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களுடன் 'Q' (க்யூ)வில் முடிவடையும் பெயர்ப் பாரம்பரியத்திற்கு ஏற்ப  உண்மையாக இருந்தன.

24 மணி நேரம், 24 ஆண்டுகள், 24 மார்ச் 2024
தனது லேண்ட்மார்க் தருணத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா கொண்டாடியது.  1999 டிசம்பரில் இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் குறிக்கும் வகையில், ஏராளமான சலுகைகளை 2024 மார்ச் 24 அன்று 24 மணி நேரத்திற்கு டிஜிடல் தளத்தில் வழங்கியது.  24 மணி நேரத்தில் 709 மகிழுந்துகள் முன்பதிவாயின. நிறுவனத்தின் தொலைநோக்குப் பணியிலக்கான ’அனைவருக்கும் ஸ்கோடா’ (Skoda for Everyone) என்னும் புதுமை முனைவு மூலம், பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பிராண்ட் ஸ்கோடாவுடன்,  வாடிக்கையாளர்களை இணைத்தோம்.

ஸ்கோடா கியர்ஹெட்ஸ்
இது ஆட்டோமொபைல்களில் ஆர்வமுள்ள தனிநபர்களின் சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முதல்-வகையான நாடு தழுவிய பிரத்யேக உறுப்பினர் திட்டமாகும். பிரீமியம் விற்பனைப் பொருட்களுடன் கூடிய வரவேற்பு கிட் தவிர, உறுப்பினர்களுக்கு ஸ்கோடா நிகழ்வுகளில் விஐபி மரியாதை, மகிழுந்து மற்றும் சேவைப் பொருட்கள் வாங்குவதற்கான பிரத்யேக பலன்கள், வரவிருக்கும் அறிமுகங்கள் மற்றும் புதுமைகள் பற்றிய உள் அறிவிப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சக ஆர்வலர்களுடன் தனித்துவ ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கூட்டங்கள் ஆகியவற்றுக்கான அழைப்புகளும் கிடைக்கும். அனைத்து உறுப்பினர்களின் தகவல்களும் பாலிகான் பிளாக்செயினில் அச்சிடப்படுவதுன், ஸ்கோடவெர்ஸ் இந்தியா தளத்தில், டைனமிக்  என்எஃப்டி (பிரத்யேகமான மாற்ற முடியாத வில்லை) அணுக்கமும் கிடைக்கும்.

டிஜிடல் ஃப்ராண்டியட், காம்பேக்ட் எஸ்யூவி
முழுவதும் டிஜிடல் மயமான முனைவுகள் காரணமாக 2022 மிகச் சிறந்த ஆண்டாக அமைய, 2022 மற்றும் 2023இல் 1 லட்சத்திற்கும் அதிகமான மகிழுந்துகள் விற்பனையாயின.  இந்தப் புதுமைகள், ஸ்கோடா அனைத்தும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி-க்கான இயற்கையான எழுச்சியை உருவாக்கியதன் விளைவால்,  2025 முதலாம் அரையாண்டில் உலகளவில் தடம் பதிக்க உதவியுள்ளது. இந்த எஸ்யூவி குஷாக் எஸ்யூவி, ஸ்லேவியா செடான் வாகனங்கள் போன்று, எம்க்யூபி-ஏஓ-ஐஎன் தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். பல்வகைத் திறன், பாதுகாப்பு, இயக்கவியல், உள்ளூர்மயமாக்கல், குறைந்த பராமரிபுச் செலவுகள், சிக்கலற்ற உரிமை அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியா மற்றும் செக் குடியரசு நாடுகள் எம்க்யூபி-ஏஓ-ஐஎன் தளத்தை வடிவமைத்துள்ளன.  குஷாக் எஸ்யூவி இந்தியா மற்றும் உலகளவில் 2021 ஜூலையிலும், ஸ்லேவியா செடான் 2022 மார்ச்சிலும் அறிமுகமாயின.

பல ஆண்டுகளாக டிஜிடல் மயமாக்கல்
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் டிஜிட்டல் முயற்சியானது சில ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக அமலானது. அப்போது இந்தியாவிலேயே முதல் முனைவாக இந்நிறுவனம், இந்தியாவிலுள்ள அதன் அனைத்து ஷோரூம்களையும், இடைச்செயல் அட்டவணைகள், அதிவேக ஆழமான அனுபவங்கள் மற்றும் தொழில்துறையில் முதன் முதலாக டிஜிட்டல் கார் தகவல் நிலையத்துடன் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியது.  இந்த டிஜிட்டல் மயமாக்கம் வாடிக்கையாளர்கள் மகிழுந்தைத் தேர்ந்தெடுக்கவும், வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தவும் மேலும் உதவியது. 2023இல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், சர்வீஸ் சிஏஎம் முனைவையும் அறிமுகபப்டுத்தியது. கைபேசியுடன் இணைக்கப்பட்ட செயலி அடிப்படையிலான இந்த அமைப்பு மூலம், வாடிக்கையாளர் பழுது நீக்கும் பணிக்கு விடப்பட்ட தங்களது மகிழுந்தை, எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணித்து, தேவையான சேவையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இந்த டிஜிட்டல் செயலி, வாடிக்கையாளரின் உரிமை அனுபவைத்தை மேம்படுத்துவதுடன், வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu