5 வருசமா எம்.பி.யை காணோம்! பெ.ஜான்பாண்டியனிடம் பெண்கள் புகார்!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி தொகுதி வேட்பாளர் பெ.ஜான் பாண்டியன் இன்று (28-03-2024 வியாழக்கிழமை) காலை புளியரை அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் புளியரை பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். 

அப்போது அந்த பகுதியில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த வேட்பாளர் பெ.ஜான்பாண்டியனிடம் ஏராளமான பெண்கள் சூழ்ந்து நின்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். சாலைவசதி, வேலைவாய்ப்பு, குளத்துவேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேட்பாளரிடம் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டனர். இதுக்கு முன்னாடி இருந்த எம்.பி. ஓட்டு கேட்க வந்ததோடு சரி... 5 வருடமா அட்ரசே இல்லை என்று கூறி வேதனையைப் பகிர்ந்தனர். 

பொதுமக்களின் கோரிக்கைகளை கணிவுடன் கேட்ட பாஜக வேட்பாளர் பெ.ஜான்பாண்டியன், நிச்சயமாக எம்.பி., ஆனதும் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதற்கு பதில் அளித்த பெண்கள், நாங்கள் மாற்றத்தை  தருவோம். எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்று கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu