திருச்சியில் PFRDA, NPS வத்சல்யா அவுட்ரீச் திட்டத்தின் மூலம் ஆரம்பகால நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தியது

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), CAMS CRA உடன் இணைந்து, திருச்சி கலையரங்கத்தில் இன்று NPS வத்சல்யா அவுட்ரீச் திட்டத்தை ஏற்பாடு செய்தது. இது குழந்தைகளிடையே ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து சிறுவயதிலேயே நிதி விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிகழ்வில்பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பாயிண்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் பிரதிநிதிகளுக்கு நீண்ட கால நிதி திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது குறித்த ஊடாடும் அமர்வுக்கு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சித்திட்டம், சேமிப்பு, பொறுப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு போன்ற கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக விளக்க குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், நிதி விழிப்புணர்வு குறித்த கருப்பொருள் அடிப்படையிலான வரைதல் போட்டியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆரம்பகால நிதி திட்டமிடல் மற்றும் நீண்ட கால சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்க ஊடாடும் அமர்வு நடைபெற்றது.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனால் செப்டம்பர் 18, 2024 அன்று தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டமான வத்சல்யா (NPS வாத்சல்யா) 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. தெளிவாக'குழந்தைகளுக்கு முன்னுரிமை' என்ற தத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தத் திட்டம், வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நிதி ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும்அதே நேரத்தில் விக்ஸித் பாரத்@2047 இன் பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த சீரமைக்கப்பட்ட, நீண்ட கால சேமிப்புகளுக்கு குடும்பங்களை அறிமுகப்படுத்துகிறது. தொடங்கப்பட்டதிலிருந்து, NPS வாத்சல்யா சிறந்த பங்கேற்பைக் கண்டது.இது நீண்டகால சேமிப்பை முன்கூட்டியே தொடங்குவதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது.

தலைமை விருந்தினராக திருச்சிராபள்ளி துணை ஆட்சியர், திருமதி. க்ஷேத்ரிமயும் தீபி சானு கலந்து கொண்டு பேசுகையில், “NPS வத்சல்யா மூலம் ஆரம்பகால சேமிப்பு என்பது இன்று ஒரு மரக்கன்று நடுவது போல செயல்படுகிறது. அது குழந்தையின் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பாக அமைகிறது.காலப்போக்கில் மொத்த தொகையிலிருந்துகுழந்தைகள் கணிசமாகப் பயனடையலாம்” என்றார்.

PFRDAவின் செயல் இயக்குநர் ஸ்ரீ வெங்கடேஸ்வரலு பெரி, PFRDA முதன்மை பொது மேலாளர் ஸ்ரீ கே மோகன் காந்தி மற்றும் PFRDA பொது மேலாளர் திருமதி கவிதா சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர், திரு. அண்ணாதுரை,CAMS CRA, தலைமை திட்ட அதிகாரி, ஸ்ரீ சையத் ஹாசன், CAMS CRA, தலைவர்-NPS, ஸ்ரீ பிரசென்ஜித் முகர்ஜி, மற்றும் திருச்சிராப்பள்ளிமுதன்மை மாவட்ட மேலாளர் ஸ்ரீ முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். 

NPS வத்சல்யா திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மைனர் குழந்தையின் சார்பாக கணக்கைத் திறந்து இயக்கலாம். குறைந்தபட்ச ஆரம்ப மற்றும் வருடாந்திர பங்களிப்பு ₹250 மற்றும் முதலீடுகளுக்கு உச்ச வரம்பு இல்லை. 18 வயதை எட்டியதும், கணக்கு ஒரு வழக்கமான NPS Tier-I கணக்காக தடையின்றி மாறும். இது நீண்ட கால செல்வ சேமிப்பை தொடர அனுமதிக்கிறது. இது "வத்சல்யா ஆசீர்வாத்" என உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பரிசு பங்களிப்புகளையும் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் 18-21 வயதுக்குட்பட்டவர்களுக்கு பகுதியளவு பணம் எடுக்கும் வசதியையும் (நான்கு முறை) வெளியேறும் வசதியையும் வழங்குகிறது.

மாவட்ட அளவிலான தொலைத்தொடர்பு முயற்சிகள் மூலம், PFRDA குடும்பங்கள் மற்றும் பாதுகாவலர்களிடையே நிதி விழிப்புணர்வை தொடர்ந்து மேம்படுத்துகிறது.  ஆரம்பகால நிதி திட்டமிடலை ஊக்குவிக்கிறது மற்றும் குழந்தைகளுக்கான ஒழுக்கமான நீண்ட கால சேமிப்பு கலாச்சாரத்தை வளர்க்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu