ஸ்கோடா ஆட்டோ இன் இந்திய பயணத்தில் 2025 ஆண்டை இதுவரை அதன் மிக முக்கியமான ஆண்டு என்று குறித்துள்ளது. இந்தியாவில் 25வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இந்த பிராண்டு 2025 ஆண்டை72,665 கார்கள் விற்பனையுடன் முடித்தது, 2024 ஆம் ஆண்டில் 35,166 யூனிட்கள் விற்று 107% ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த அசாதாரண சாதனை 2025 ஐ ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் இதுவரை மிகப் பெரிய ஆண்டாக மாற்றியுள்ளது, தயாரிப்புகள், சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் டச் பாயிண்ட்கள் அனைத்திலும் ஏற்பட்ட வேகமான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், “2025 ஆண்டு எப்போதும் எங்களுக்காக சிறப்பான ஆண்டாகவே இருக்கும். இது இந்தியாவில் எங்கள் 25வது ஆண்டுவிழாவைக் குறிக்கிறது, மேலும் இதுவரை எங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் பல்வேறு தயாரிப்பு வரிசையை கொண்ட ஆண்டாகும்; நெட்வொர்க் மற்றும் சந்தையில் தற்போது எங்கள் விரிதலும் பரவலும் மிக அதிகமான நிலையில் உள்ளது. இந்தியாவில் எங்களுக்கான இதுவரை மிக முக்கியமான/மிகப்பெரிய ஆண்டாக மாற்றியது. கைலாக்கிற்கு கொடுக்கப்பட்ட பெரும் வரவேற்பு, கோடியாக் மீது தொடர்ந்த பாராட்டுகள், மற்றும் ஆக்டோவியா ஆர்எஸ் -ன் மீள் வருகைக்கு வெளிப்பட்ட உற்சாகம், வாடிக்கையாளர்கள் பிராண்டுடன் பகிரும் வலுவான உணர்ச்சி தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதோடு, எங்கள் இந்தியா 2.0 பயணத்தை தொடங்கிய கார்களான குஷாக் மற்றும் ஸ்லேவியா தொடர்ந்து நிலையான தேவையைப் பார்க்கின்றன. நாம் 2026 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தபோது, புதுப்பிக்கப்பட்ட தயாரிப்பு முன்னெடுப்பு, திறன்மிக்க விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை முயற்சிகள், மேலும் எங்கள் வருகையை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை நெருக்கமாக அணுகுவதில் மிக வலுவான கவனம் செலுத்துவதுடன், இந்த வேகத்தை தொடர்ந்துசெல்வதற்காக எதிர்பார்க்கிறோம், என்றார்.
தயாரிப்புகளைத் தாண்டி, 2025-ல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது பிராண்டின் செய்தி மொழி மற்றும் சுருக்கமான கதைகள், பண்பாட்டு பொருத்தம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட அனுபவங்களின் மூலம் வலுப்படுத்தியது. இந்தியா, புதுப்பிக்கப்பட்ட கார்ப்பரேட் அனுபவம் மற்றும் வடிமைப்புடன் தனது நெட்வொர்க் முழுமையாக 100% ரீபிராண்ட் செய்த உலகின் முதல் பெரிய ஸ்கோடா சந்தையாக மாறி, வாடிக்கையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மற்றும் நவீன பிராண்டு அனுபவத்தை உறுதிப்படுத்தியது. ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் முதல் பிராண்டு சூப்பர்ஸ்டாராக ரண்வீர் சிங்குடன் இணைந்ததுடன் வாடிக்கையாளர் தொடர்பில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை சந்தித்தது; இது பிராண்டுக்கு இளம் ஆற்றலையும் பண்பாட்டு பொருத்தத்தையும் சேர்த்தது. ஆண்டின் பிற்பகுதியில், ஏற்பட்ட வேகத்தை மேலும் அதிகரிக்க, ‘பேன்ஸ், நாட் ஓனர்ஸ்’ பிரச்சாரம் ஸ்கோடாவுடன் மக்கள் பகிரும் ஆழமான உணர்ச்சி தொடர்பைக் கொண்டாடியது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2026ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், தனது வெள்ளி விழா ஆண்டில் உருவாக்கிய வலுவான அடித்தளத்தை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை முயற்சிகளை விரிவுபடுத்துதல், சந்தை ஊடுருவலை ஆழப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துகளை கேட்டு அவர்களுடன் தொடர்ந்து வளர்வதற்கான முக்கியத்துவம் ஆகியவற்றில் கவனம் தொடர்கிறது.

0 கருத்துகள்